jokes
‘‘இன்ஸ்பெக்டர் ஏன் இவ்வளவு கோபமா இருக்கார்?’’ ‘‘அவரு லஞ்சம் வாங்க வச்சிருந்த ஸ்வைப் மிஷினை யாரோ சுட்டுட்டு போயிட்டாங்களாம்!’’ - கீழை அ.கதிர்வேல்.
‘‘நகைக்கடை திறப்பு விழாவுக்கு ஏன் தலைவர் போக மாட்டேன்னு சொல்றார்?’’ ‘‘கடையைச் சுத்தி சிசிடிவி கேமரா வைச்சிருக்காங்களாம்!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘என்னய்யா சொல்ற... பாரதியாரா நடிச்சவர் அந்தக் கேரக்டராவே மாறிட்டாரா..?’’ ‘‘ஆமா... ‘கண்ணம்மாவை பாடிய வாயால் சின்னம்மாவை பாட மாட்டேன்’னு சொல்றாரே!’’ - பாலா சரவணன், சென்னை - 128.
‘‘அந்த பிச்சைக்காரர் என்ன சொல்றார்?’’ ‘‘தர்மப் பணத்தை அவரோட அக்கவுண்ட்ல போடச் சொல்றார்!’’ - ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
‘‘எதிரியின் கோட்டைக்குச் சென்று திரும்பியவன் நான்..!’’ ‘‘‘கோட்டை’ விட்டுட்டாங்கன்னு சொல்லுங்க மன்னா!’’ - எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.
‘‘எதுக்கு அந்தாளை போலீஸ் புடிச்சுட்டு போகுது?’’ ‘‘சிடி கடைக்கு ‘சின்னம்மா வீடியோ கடை’னு பெயர் வைச்சிருந்தாராம்!’’ - அஜித், சென்னை - 126.
‘‘தேர்தலுக்காக நாங்கள் பல கோடிகளை செலவு செய்திருப்பது உங்களுக்கே தெரியும். அத்தொகையை எடுப்பதற்காவது எங்கள் அணியை ஆட்சி அமைக்க தயவு செய்து வழி செய்யுங்கள் என்று ஆளுநரை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்!’’ - வி.ரேவதி, தஞ்சை.
‘‘தலைவர் எதுக்கு மேஸ்திரியை அழைச்சுட்டு வரச் சொல்றார்?’’ ‘‘உட்கட்சிப் பிளவை சரிசெய்யத்தான்!’’ - சரவணன், கொளக்குடி.
|