கவிதைக்காரர்கள் வீதி
வற்றிய நதிக்குத் தெரியும் நம்மை விட்டுப் போகாதது கூழாங்கற்கள் மட்டுமே என்று! - மு.க.இப்ராஹிம், வேம்பார்.
நமக்கு எந்தப் பக்கம்? நாசூக்காய் சாதி அறிய முயலும் நகரவாசியின் கேள்வியில் ஒளிந்திருக்கிறது தீண்டாமையின் மிச்சம். - ஜி.ஆரோக்கியதாஸ், சென்னை-32.
நாம் ஊடலின் விளிம்புகளில் படுத்துக்கொண்டிருக்கிறோம் உறக்கம் நமக்கிடையே புரண்டுகொண்டிருக்கிறது - ஜி.கனிமொழி, கடலூர்.
நதியின் மெல்லிய அலையாட்டலில் ஓய்வுறத் துவங்கியது, கடைசிப் பயணியையும் கரையேற்றி முடித்த படகு! - மகிவனி, கோவை.
உடன் விளையாட குழந்தைகள் வேண்டுமென்று கடைக்காரனிடம் அடம்பிடித்து அழுகின்றன பொம்மைகள். - சா.நாதன் ரவிகுமார், திருவள்ளூர்.
சிறுசிறு முத்தங்களால் தொடங்குகிறது பெருங்காமம்! - விகடபாரதி, திட்டச்சேரி.
|