குங்குமம் டாக்கீஸ்



* கீர்த்தி சுரேஷ் காட்டில் மழையோ மழை. ‘சண்டக்கோழி -2’, அல்லு அர்ஜுன் அறிமுகமாகும் தமிழ்ப்படம், விஜய்சேதுபதி படம் என மூன்று படங்களிலும் வரிசையாக நடிக்கிறார்.

* சூப்பர்ஸ்டாரை நேரில் சந்தித்து ரெண்டு வார்த்தையாவது பேசிவிட வேண்டும் என்று தோனி ஆசைப்பட, உடனே வரச் சொல்லிவிட்டார் ரஜினி. இவர்களின் சர்ப்ரைஸ் சந்திப்பு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டில் நடந்தது. தோனியின் நண்பரும், ‘எம்.எஸ். தோனி’ படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவும் அவருடன் வந்திருந்தனர். படத்தின் புரொமோஷனுக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தோனி, ‘‘இந்தியாவில் பல இடங்களில்  உணவுகளை சாப்பிட்டது உண்டு. ஆனால் சென்னையில் கிடைக்கும் பிரியாணி போல  சுவையான பிரியாணியை எங்கும் சாப்பிட்டது இல்லை’’ என உருகினார்.

* நல்ல ஓய்வில் இருந்து ரஜினி இப்போது எமி ஜாக்சனோடு பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

* ஆன்மிக குரு ‘ஓஷோ’வின் வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் படமாகிறது. ஓஷோவாக நடிக்க இருப்பவர் மோகன்லால் என்பது கூடுதல் தகவல்.

* விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘இது தானா சேர்ந்த கூட்டம்’, பாலிவுட்டில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ என்ற படத்தின் பாதிப்பில் உருவான கதை என்கிறார்கள்.

* பிரியங்கா சோப்ரா நடித்த ஹாலிவுட் டி.வி. சீரியல் ‘குவான்டிகோ’ சீஸன் 2 அமெரிக்காவில் மட்டுமின்றி இப்போது இந்தியாவிலும் ஒளிபரப்பாவதால் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார் பிரியங்கா. நாளொரு ஃபங்ஷனும் பொழுதொரு புரமோஷனுமாக கலக்கி வருகிறது பொண்ணு!

* தனுஷுக்கு உடனடியாக வெற்றி ஒன்று தேவைப்படுகிறது. அதனால் ‘கொடி’ புரமோஷனை ஆரம்பித்துவிட்டார். உடனே ரஞ்சித் இயக்கத்தில் தான் தயாரிக்கும் ரஜினி படப் பூஜையையும் போடுகிறார்.

* மிஷ்கினின் இயக்கத்தில் விஷால்-ரகுல்ப்ரீத்சிங் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கிவிட்டது.

* ‘தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்’ -இது சித்தார்த் நடித்து வரும் மும்மொழிப் படம். இதன் ஷூட்டிங் இப்போது ஊட்டியில் பரபரக்கிறது. சித்தார்த் ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இது தவிர, ‘புதிய திருப்பங்கள்’, ‘தரமணி’, ‘வடசென்னை’ படங்களில் ஆண்ட்ரியா பிஸி!

* ‘‘ஹீரோவா மட்டும்தான் நடிப்பேன்னு எந்த சபதத்தையும் போட்டுக்கல. எல்லா விதமான கேரக்டர்களையும் செய்து பார்க்க ஆசை’’ என்கிறார் ஜெயராமின் மகன் காளிதாஸ்.

* சேரனுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டன் என்ற நிறுவனம், ‘சிறந்த திரைப்படங்கள் தந்தவர்’ எனப் பாராட்டி அவரை கௌரவித்துள்ளது. இதற்கான விழா சென்னையில் நடந்தது. விழாவில் மெடலும், பாராட்டு சான்றிதழும் சேரனுக்கு வழங்கப்பட்டது.

* அதிக சம்பளம் பெறும் இயக்குநரின் வரிசையில் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸுக்கு அடுத்தபடி இப்போது அட்லி வந்துவிட்டார். விஜய் படத்திற்கு அட்லி வாங்கிய சம்பளம் அப்படி!

* ‘சபாஷ் நாயுடு’ பட ஷூட்டிங் அனுபவத்தைப் பற்றி மனம் திறந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். ‘‘லாஸ் ஏஞ்சல்ஸ்னு சொன்னதும் ஜில்லுனு ஜாலியா ஏசியில் இருக்கற மாதிரி இருக்கும்னு நினைப்பாங்க. ஆனா, நாங்க போன டைம்ல அங்கே செம ஹாட் க்ளைமேட்’’ என்கிறார் ஸ்ருதி.

* ஹாலிவுட் தம்பதியான பிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக கசிந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகத்தையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்த தம்பதிக்கு வளர்ப்புக் குழந்தைகள் உட்பட 6 குழந்தைகள் உள்ளனர். பிராட் பிட் இன்னொரு நடிகையுடன் கொண்டிருக்கும் காதலே ஏஞ்சலினா அவரைப் பிரியக் காரணம் என்று நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஷயம் கேள்விப்பட்டதும், மேடம் டுஸாட் மெழுகு மியூசியத்தில் இந்த இருவரின் மெழுகுச் சிலைகளையும் தனித்தனியே பிரித்து வைத்துவிட்டார்கள். கோர்ட்டைவிட ஸ்பீடாக இருக்கறாங்கப்பா!

* ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மகேஷ்பாபு படத்தில் எஸ்.ஜே. சூர்யா சிக்ஸ்பேக், க்ளீன் ஷேவ் தோற்றத்தோடு வில்லனாக நடிக்கிறார்.

* ஹன்சிகாவின் ஃபேவரிட் லிப்ஸ்டிக் பிராண்ட் பெயர், ‘kylie’.

* ‘‘எனது திருமணம் குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். எனது திருமணத் தேதியை நானே முறைப்படி அறிவிப்பேன். எனது வாழ்க்கை சிறுவயது முதல் நிலையற்றதாக இருந்திருக்கிறது. நான் வெவ்வேறு உறவுகளில் இருந்து பிரிந்து வந்துள்ளேன். இனி என் வாழ்வில் எந்த உறவும் பிரியாமல் நீடித்து இருக்கும்’’ என ஐதராபாத்தில் நடந்த கடை திறப்பு விழா ஒன்றில் உருகியிருக்கிறார் சமந்தா.

* திருமணம் செய்துகொண்டபிறகே பல நடிகைகளுக்கு ஞானம் பிறக்கும் போல! பிபாஷா பாசு இதில் லேட்டஸ்ட். ‘‘திருமணம் என்ற அமைப்பை நான் மதிக்கிறேன். ஆனால் ஒரு பெண் அவளின் திருமணத் தகுதியை வைத்தே மதிப்பிடப்படக் கூடாது. எல்லா பெண்களின் வாழ்க்கைப் பயணமும் திருமணத்தில் போய் முடிய வேண்டும் என்பதில்லை’’ என்கிறார் பிபாஷா. 

* ஐதராபாத்தில் அஜீத் பட ஷூட்டிங் 15 நாட்கள் நடக்கிறது. அது முடிந்தபிறகு தொடர்ச்சியாக சென்னையில்தான் படப்பிடிப்பு.

* கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலு தமிழ் சினிமாவோடு மறுபடி கலக்க ஆரம்பித்துவிட்டார். ஜீ.வி.பிரகாஷ்-வடிவேலு கூட்டணி ஆரம்பித்திருக்கிறது. அடுத்து விஜய்சேதுபதி படத்தில் நடிக்கப் போகிறார்.

* ‘ஆரண்ய காண்டம்’ வெளிவந்து வருஷங்கள் ஆகிவிட்டன. கவலையே படாமல் இப்போதுதான் ஒரு லைன் கண்டுபிடித்து ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்திருக்கிறார் தியாகராஜா குமாரராஜா. அந்த ஸ்கிரிப்ட்டுக்கு பெரிய போட்டி.