சிற்பமும் சிறப்பும்-சிலிர்ப்பூட்டும் சிவபுரம் சிற்பங்கள்
ஆலயம்: ராஜராஜ ஈஸ்வரமுடைய மஹாதேவர் (சிவன்) ஆலயம், சிவபுரம், (பேரம்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ)திருவள்ளூர் மாவட்டம். காலம்: முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் (10ஆம் நூற்றாண்டு) துவக்கப்பட்டு, அவரது மகன் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
அதிகம் அறியப்படாத இந்த சோழர் கால கோயில் ஒரு சிற்பக்கலை அற்புதம். இந்த சிறிய ஆலயத்தில் கருவறை, அர்த்தமண்டபம், முக மண்டபம், மகா மண்டபம் என ஆலயத்தின் அனைத்து கூறுகளும் அமைந்துள்ளன. இக்கோயிலின் இறைவன் லிங்கவடிவில் உள்ள சிவன், ‘‘ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர்’’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இறைவி காமாட்சி அம்மன்.
செய்தி: படங்கள்: மது ஜெகதீஷ்
|