செப்டம்பர் 16 முதல் 30 வரை ராசி பலன்கள்



பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்: ரகசியங்களை காப்பாற்றும் மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரத்து சேரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். குடும்பாதிபதி சுக்கிரன் சுக ராசியில் இருப்பது பலம். குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை, தாமதம் ஏற்படலாம். பெண்களுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. அரசியல்துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது. மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். பரிகாரம்: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்.

ரிஷபம்: எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் தன்மை உடைய ரிஷப ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசியில் ராகுவின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக  வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வாகனங்களை இயக்கும்போது நிதானம் தேவை. பெண்களுக்கு நிதானம் தேவை. கலைத்துறையினருக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்துறையினர் முன்னேற்றம் அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்:  அம்மனை வணங்க எல்லா
காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

மிதுனம்: தனது வாதத்தால் உயர்ந்த நிலைக்கு வரும் திறமை உடைய மிதுன ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்திலிருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபச்செலவு கூடும். கலைத்துறையினருக்கு
மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் வந்து சேரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை அர்ப்பணித்து வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.

கடகம்: கடினமான காரியங்களில் பக்குவமாக செயல்படும் கடக ராசியினரே! இந்த காலகட்டத்தில் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடின உழைப்புக்குப்பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான காலமாக அமையும். பெண்களுக்கு முக்கியமான வேலைகள் நல்லபடியாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும்போது கவனம் தேவை.
பரிகாரம்: திங்கட்கிழமைதோறும் அங்காள பரமேஸ்வரியை வணங்க பிரச்னைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.

சிம்மம்: போராட்டங்களை வெற்றி மாலைகளாக மாற்றத்தெரியும் வித்தை அறிந்த சிம்ம ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதக மான பலன் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து
வேற்றுமை நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மனவலிமை அதிகரிக்கும். பெண்கள் நன்மை தீமைபற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். அரசியல்
துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும்.  சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
பரிகாரம் : தினமும் சூரியனை வணங்கிவர காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

கன்னி: எதிர்காலத்தை சரியாக திட்டமிடும் கன்னி ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசியில் சூரியன் இருக்கிறார். புத்தி
சாதூரியமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படிச் செய்வது என்ற மனத்தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு பேச்சின் இனிமை சாதூர்யம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். அரசியல்துறையினருக்கு பூர்வீகச் சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.
பரிகாரம்: நவகிரகத்தை தினமும் வணங்கி வர எல்லா நலன்களும் உண்டாகும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

துலாம்: தொழில் திறமை கொண்ட துலா ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதனின் சஞ்சாரம் சூரியன் வீட்டில் இருப்பதால் முன்கோபம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.  சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. உங்கள் மீது இருந்து வந்த குற்றச்சாட்டுகள் அகலும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்,  மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். பெண்கள் முன் கோபத்தை குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு கருத்து வேற்றுமை நீங்கும். அரசியல்துறையினருக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன்  பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற  உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.
பரிகாரம்:  சப்தகன்னியரை வணங்க எதிலும் வெற்றி உண்டாகும். மனக்குழப்பம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வெள்ளி.

விருச்சிகம்: வாழ்க்கையில் முன்னேற்றமடையை திட்டமிட்டு செயல்படும் விருச்சிக ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசியில் கேது இருந்தாலும் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் தாமதப்பட்ட காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். பணவரத்து தாமதப்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.  பெண்களுக்கு திறமை அதிகரிக்கும்.  கலைத்துறையினர் புத்திசாதூரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். மாணவர்கள்  மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது நல்லது. அடுத்தவரை  நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்.
பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்கி வர பிரச்னைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.

தனுசு: தனது புத்திசாதூர்யத்தால் முன்னேறும் தனுசு ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி குருவின் சஞ்சாரத்தால் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். தடைப்பட்ட பணம் வந்து சேரும். நன்மையும் ஏற்படும். தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும். பாக்கியாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்கப் பெறுவார்கள். புத்திசாதூர்யத்தால் காரிய நன்மை பெறுவார்கள். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். பெண்களின் செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கலாம். அரசியல்துறையினருக்கு தடைப்பட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். சக மாணவர் மத்தியில் மதிப்பு கூடும்.
பரிகாரம் : விநாயகரை அறுகம்புல் மாலை போட்டு வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

மகரம்:  மன உறுதியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க பாடுபடும் மகர ராசியினரே! இந்த காலகட்டத்தில் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை சொத்து வாங்குவதற்கான சூழல் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு மனதடுமாற்றம் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். மாணவர்கள்  அதிக நேரம் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: யோக நரசிம்மரை வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.

கும்பம்: அனுபவ அறிவால் வெற்றி பெறும் கும்ப ராசியினரே! இந்த காலகட்டத்தில் கிரக அமைப்புகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது.  எல்லா வகையிலும் லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுத்திறன் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேலதிகாரிகள் கூறியபடி காரியங்களை செய்து முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு நல்ல சிந்தனை ஏற்படும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அரசியல் துறையினருக்கு திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து கல்வியில் வெற்றி பெற நன்கு படிப்பீர்கள்.
பரிகாரம்: சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும்
வெற்றிபெறும். துன்பங்கள் விலகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

மீனம்: எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் கொண்ட மீன ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி குரு பார்வையால் பணதேவை பூர்த்தியாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.  தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க  வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. நெருக்கடியான  நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பெண்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் மெத்தனம் காணப்படும். கல்வியில் வேகம் காட்டுவது வெற்றிக்கு நல்லது.
பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி பகவானை வணங்க எல்லா நன்மை
களும் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்.