கருணைமிகு கருடாழ்வார்
மாயவனே மனத்தூயவனே! மான்நோக்கே சர்ப்பமாலையனே! காவலனே சதுர் வேதியனே! கோமகனே கொடிமரமே! நாரணனே அவன் வாகனனே! நாபிளந்த நாகரை காப்பவனே! கூர்மதியே ஒளி விழியே! வேர்குலமே பகை அழிப்பவனே!
* மல்லிகையே மரிக்கொழுந்தே! செம்பட்டு விரும்பி அணிபவனே! நெல் வருமே நற்சொல் வருமே! மனதிடம் வருமே அமுதகுடம் வருமே! தேனிசையே குரல் கோகிலமே! கனிசுவையே கார்முகிலே! கருணை கருடனை வணங்கிடவே இல்லத்தில் நலம் சேர்ந்திடுமே!
* பெருமானே பெரிய திருவடியே! பெரும் சிறகே அணிகலனே! ருத்ரவனே சுகீர்த்தியனே! சத்தியனே வைரமணிமுடியே! மலைமேருவை உடைத்தெறிந்தவனே இலங்கை நாட்டை தந்தவனே! விஷம் முறிப்பவனே வெற்றி குவிப்பவனே! விலையிலா மணியை கொண்டவனே!
* வைகுண்டனே பெரியாழ்வாரே! உயரம் பறக்கும் கருடாழ்வாரே! வாழ்வில் உயரம் தருபவனே துயரம் துடைத்து அருள்பவனே! குருவை குருவாய் பெற்றவனே” குறையிலா செல்வம் சேர்ப்பவனே! மறைகள் போற்றும் மாதவனே! துவாரகை நகரின் காவலனே!
* சிறகுடையான் தெய்வ சீருடையான்! மறமுடையான் மாமருந்துடையான்! விறலுடையான் நல்ல குரலுடையான்! திறலுடையான் அமைதி குணமுடையான்! குழலுடையான் கூர் மதியுடையான்! அழலுடையான் வசிய அழகுடையான்! அறமுடையான் தாய் அன்புடையான்! செம்மண் நிறமுடையான்! வணங்கிட வாழ்த்திடுவான்!
* கருடன் கருணை பெற்றிடுவோம்! அருணன் அன்பை வென்றிடுவோம்!
- விஷ்ணுதாசன்
|