திருவருள் புரிய வைக்கும் குரு ஸ்லோகங்கள்
அபூர்வ ஸ்லோகம்
குரு பகவான் மந்திரங்கள்
குரு தொடர்பான பிரச்னைகள் மற்றும் குரு தசை அல்லது குரு அந்தரங்கத்தின் போது குருவின் கடவுளான சிவபெருமானைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி ருத்ரம் படிக்க வேண்டும்.
குரு மூல மந்திர ஜபம்: “ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷம் குரவே நமஹ”
- இந்த மந்திரத்தை 40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும். குரு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்:
(வடமொழியில்)
தேவானாம் ச ரிஷீணாம் ச குரும் காஞ்சன ஸந்நிபம் பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்
(தமிழில்)
குணமிகு வியாழக் குருபகவானே மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய் பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்
வியாழனன்று தானமாக குங்குமப்பூ அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை கொடுப்பது மரபு.
குரு காயத்ரி மந்திரம்: வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி| தந்நோ குரு: ப்ரசோதயாத்
குரு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 11 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். கீழ்க்காணும் மிகவும் அரிதான இந்த கவசத்தை ஒவ்வொரு வியாழக்கிழமையில் காலை 6 முதல் 7 மணி வரை குரு ஹோரை நேரத்தில் பாராயணம் செய்தால் குருபகவானின் பேரருளுக்கு பாத்திரமாகலாம் என்பது நம்பிக்கை -
சீரியன் மனத்துள் வேண்டும் சித்தி தந்து அளித்துச் செய்யும் பாரியல் கருமம் கூட்டிப் பரவுமெய்ஞ் ஞான வாழ்வு மேரியல் செல்வப் பேறும் யாவையும் ஒருங்கு நல்கும் தேரியல் அறிஞன தேவர் தேசிகன் திருத்தாள் போற்றி அரும் பிருகஸ்பதிப் பேர் ஆண்டகை சென்னி காக்க வருந்திரு நெற்றி காக்க வானவர் குரவன் கன்னம் விரும்பினன் காக்க நாட்டம் வேண்டுவ தருவோன் காக்க பருங்குமிழ் பொருவு நாசி பண்ணவன் அரசன் காக்க பாட்டு அமர்செவ்வாய் வேத பாரகன் காக்க துண்டம் கூட்டு முற்றிவன் காக்க குலவரைப் புயம் இரண்டும் வேட்டமர் சுகம் தந்து ஆள்வோன் விரும்பினன் காக்க செங்கை வாட்டும் வச்சிரங் கைக்கொள்ளும் வானவன் வழாது காக்க பருவரை பொருவு மார்பம் பயிலுங்கீட் பதி புரக்க விருதனம் வாக்கு வல்லோன் என்றும் வந்து எய்திக் காக்க வருசுகம் நல்கும் நாதன் வயங்கு எழில் வயிறு காக்க பொருவரு நீதி வல்லோன் பொற்புஉறு நாபி காக்க எங்கும் சென்று அளிக்கும்ஈசன் எழிற்கடி புரக்க ஊருத் தங்கு புண்ணியன் புரக்க சங்கமெய்ஞ் ஞானம் ஈயும் புங்கவன் புரக்க பாதம் புகல் உலகெல்லாமாகும் அங்கணன் புரக்க மேனி அமர் குருப் புரத்து காக்க காலையும் உச்சிப் போதும் கதிரவன் குடபான் மேவு மாலையும் வானோர் போற்ற வருகுரு கவசம் என்னும் நூலை அன்போடு உரைக்கும் நுண்ணியன் வேட்டாங்கு எய்திச் சோலையாம் தரு விண்ணாட்ட சுரரையும் வெற்றி கொள்ளும் மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கு அரசன் மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதி பனாகி நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும் இறையவன் குரு வியாழன் இருமலர்ப் பாதம் போற்றி போற்றி.
தொகுப்பு: ந. பரணிகுமார்
|