லிங்க வடிவில் முருகன்



நெய்வேலிக்கு அருகில் உள்ளது ‘வில் உடையான்பட்டி’ திருத்தலம். இங்கு கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் மூலவர் முருகப்பெருமான், வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாத திருக்கோலத்தில் ‘சிவலிங்க வடிவில்’ கீழே அரையடி உயர ஆவுடையாருடன் காட்சி தருகிறார். மேலும் உற்சவர் முருகப்பெருமான் வில் ஏந்தி திரிசடை தரித்து வள்ளி-தெய்வானையுடன் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார்.

பெண் அலங்காரத்தில் முருகன்

கோவை மாவட்டத்தில் உள்ளது சீரவை. இங்கு கோயில்கொண்டு அருள்புரியும் முருகப்பெருமான் திருத்தண்டு ஊன்றிய கோலத்தில் காட்சி தருகிறார். விசேஷ நாட்களில் முருகப்பெருமானை வேடன், ராஜர் மற்றும் பெண் போன்ற கோலங்களில் அலங்காரம் செய்வர். இவற்றில் பெண் கோலத்தில் முருகப்பெருமான் மிக அழகாகக் காட்சி தருவார். இந்தக்கோலத்தில் வழிபட, திருமணத்தடை நீங்கி கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

- டி.ஆர்.பரிமளரங்கன்