சகல யோகங்களையும் அனுபவிக்க உள்ளீர்கள்!



என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

* எனது மகளுக்கு தற்போது வயது 28 ஆகிறது. ஒரே வாரிசு. இன்னும் திருமணம் ஆகவில்லை. வருகிற வரன்கள் எல்லாம் மூலம் நட்சத்திரம் என ஒதுக்குகிறார்கள். எனது மகளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? எந்தத் திசையிலிருந்து மணமகன் வருவார்? பரிகாரம் கூறுங்கள்.
- J. அஞ்சலிதேவி, திண்டிவனம்.

தங்கள் மகள் சிம்ம லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். தற்போது சந்திர தசையில் சுய புக்தி வருகிற 6.6.2017 வரை உள்ளது. அடுத்து வருகிற செவ்வாய் புக்தி 5.1.2018 வரை உள்ளது. செவ்வாய் புக்தியில் வருகிற ஜூன் மாதம் முதல் திருமணம் யோகத்திற்கான காலமாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாது என்பது பொது விதி. ஜாதகத்தில் சூரியனும், மூன்றாம் பாவமும் மாமனாரை குறிக்கும். இந்த வீட்டின் அதிபதி பலம் பெற்றதால் மாமனாருக்கு தீர்க்காயுள் என்பது விதி.

தங்கள் மகளுக்கு சூரியன் ஆட்சி பெற்றும், சிம்ம லக்னத்திற்கு மூன்றாம் அதிபதி துலாத்தில் ஆட்சி பெறுவதும் மிகச் சிறப்பே கவலை வேண்டாம். இதுவரையான திருமணத் தடைக்கு காரணம் களத்திர ஸ்தானாதிபதி சனி வக்கிரம் பெற்று விரயாதிபதி சந்திரன் சேர்க்கை பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இருப்பது மிக கடுமையான புனர்பூதோஷத்தால் பாதிப்பு அடைந்துள்ளது. ஒருவரின் ஜாதகத்தில் புனர்பூதோஷம் ஓர் காரியம் நடக்க இருப்பதே கடைசி நொடியில் மாற்றி அமைக்கும் திறன் படைத்தது.

இவையே திருமணம் தள்ளிப்போகக் காரணமாகும். குருபகவான் மிதுன ராசியில் அமர்ந்து சனி மற்றும் சந்திரனை பார்ப்பதால் சிறு தடைக்கு பிறகு தோஷம் விலகும். நாகதோஷத்திற்குப் பரிகாரமாக ஒருமுறை திருநாகேஸ்வரம் சென்று வரவும். வியாழன் தோறும் நாகர் சிலைக்கு விளக்கேற்றி வருவது திருமணத் தடையை நீக்கும்.  தென்கிழக்கு திசையில் இருந்து வரன் வரும்.

* எனது மகன் சக்திபவன் 12ம் வகுப்பு வரை நன்றாக படித்தான். பிறகு மேற்படிப்புக்காக நான்கு கல்லூரியில் விட்டு விட்டு சேர்ந்தும்கூட பட்டப் படிப்பை முடிக்கவில்லை. நண்பர்கள் சகவாசத்தால் பொய் பேசியே வாழ்க்கையைத் தொலைத்து விட்டான். பல ேஜாதிடர்கள் கூடிய அறிவுரையின்படி பரிகாரமும் செய்து விட்டோம். எதுவுமே நல்லது நடக்கவில்லை. ஏதேனும் பரிகாரம் செய்தால் வெளிநாடு போவாரா? மண வாழ்வு வேண்டாம் என்கிறார். திருமணம் உண்டா?
- கே.பிச்சை, சிவகங்கை.

தங்கள் மகன் துலாம் லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம், மனிதனுக்கு கர்மாவின் படியே வாழ்வியல் சம்பவங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொருக்கும் தனித்துவம் கொண்ட பிறப்பாகவே பூமியில் பிறக்கிறார்கள். அவை என்ன என்பதை கண்டு அறிவதில் பலரது வாழ்க்கை பாதியைக் கடந்து விடுகிறது. தங்கள் மகன் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்லும் காலத்தில் போகம் மற்றும் வீர்ய ஸ்தானாதிபதி குருபகவான் மூன்றாம் இடத்தில் பாதகாதிபதி சூரியன் சேர்க்கை பெற்றிருக்கிறார்.

அஷ்டமாதிபதி சுக்கிரன் நட்சத்திரத்தில் அமர்ந்து சுகஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்ததே படிப்பில் நாட்டத்தை குறைத்து விட்டார். ஜீவனகாரகன் சனியோடு கேது விருச்சிக ராசியில் இருப்பதும், எதிலும் மனம் ஒட்டாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. வாய்ப்புகள் கிடைத்தும் அதை ஈடுபாட்டுடன் பயன்படுத்திக் கொள்ளா நிலையே தருகிறது. இருப்பினும் இவருக்கென்றே தனித்துவமான வாழ்க்கை அமைய உள்ளது.

அதில் சென்றால் வாழ்வு வளமாகும். இனி வரும் காலங்களில் ஆன்மிகத் தொடர்புகள், அவை சார்ந்த பணிகளில் ஈடுபாட்டையும் உண்டாக்கி, புதியதொரு வாழ்வுக்கு இனி இட்டு செல்லும். வருகின்ற 27.9.2018ல் திருமணத்துக்கான சூழல் உண்டாகும். காதல் திருமணம் நடக்கும். குலதெய்வ வழிபாட்டை முழு மனதோடு நம்பிக்கையோடு செய்யுங்கள். விரைவில் மாற்றம் காண்பீர்.

* என் வீட்டிற்கு கிழக்குப் பக்கத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காலி மனை வெகு நாட்களாக காலியாக உள்ளது. அதை வாங்குவதற்கு நான் சில மாதங்களாக அரசு வழியில் முயற்சி செய்து வருகிறேன். சாத்தியம் உண்டா வாங்க? வீடு கட்டுவேனா? கடன் பிரச்னை எப்பொழுது தீரும்? பரிகாரம் உண்டா?
- தரன், செங்கல்பட்டு.

மகரம் லக்னம், மேஷம் ராசி, அஸ்வினி நட்சத்திரம். தற்போது சந்திர தசையில் சூரிய புக்தி ஏப்ரல் மாதம் வரை நடப்பில் உள்ளது. சுக ஸ்தானத்தில் சந்திரன் கேதுவோடு சேர்க்கை பெற்று சப்தம ஸ்தானத்தில் அமர்ந்த சனிபகவானின் பார்வை மேஷத்தில் உள்ள சந்திரன் மற்றும் கேதுவின் மேல் விழுவதுதான் இடத்தை வாங்குவதில் தடையை ஏற்படுத்துகிறது. அதிலும் அஷ்டமாதிபதி சூரிய புக்தி முடியும் வரை அதற்கான வாய்ப்புகள் இல்லை. வருகிற செப்டம்பர் மாதம் நீங்கள் குறிப்பிட்ட இடம் முடியும் சூழல் உள்ளது.

ஆயினும், நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடு கட்டி வாழ்வது சிறப்பை தராது. வேறு புதிய இடத்தில் வீடு வாங்கி கட்ட முயற்சி செய்யவும். கடன் பிரச்னை செவ்வாய் தசையில் அடியோடு விலகி விடும். தர்ம கர்மாதிபதி யோகம் சிறப்பாக இருப்பதால் இனிவரும் காலம் சகல சம்பத்தோடு யோகங்களை அனுபவிக்க உள்ளீர்கள்.

* என் ஜாதகப்படி எப்பொழுது எங்களுக்கு சொந்த வீடு அமையும்? எனக்கு சுகர், நெஞ்சு வலி காரணமாக மருத்துவ சிகிச்சை செய்து வருகிறேன். உடல்நிலை சீராகுமா அல்லது அறுவை சிகிச்சை செய்யும் நிலை உண்டாகுமா?
- விஸ்வநாதன் ராஜ், விழுப்புரம்.

மேஷம் லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷம் நட்சத்திரம். தற்போது ரோக ஸ்தானாதிபதி புதன் தசையில் சுய புக்தி வருகிற ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது. தசாநாதன் புதன் அஷ்டமாதிபதி செவ்வாய் நட்சத்திரத்தில் அமர்ந்து செவ்வாய் கேதுவோடு சேர்க்கை பெற்று மூன்றில் அமர்ந்து பிரச்னைகளை தருகிறார். பொருளாதாரத்தில் கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள். கோட்சாரத்தில் கேது பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு வந்தநாள் முதல் நீங்கள் குறிப்பிட்ட நெஞ்சு வலி வந்திருக்கும்.

பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் மேஷத்தில் அமர்ந்து கோட்சார ராகு சுக்கிரனுக்கு ஐந்தாம் வீட்டுக்கு வந்தநாள் முதல் சுகர் அதிகப்படியான ஆனதுக்கும் காரணமானது. வருகிற ராகு - கேது பெயர்ச்சியோடு தங்களின் உடல்நிலை பிரச்னை சரியாகும். பயம் வேண்டாம். வருகிற ஜூன் மாதம் அறுவை சிகிச்சை சூழல் உண்டாகும் நிலை உள்ளது. வீடு கட்டும் யோகம் 2019 மே மாதம் அமையும்.

* எனது மகனின் திருமணத்துக்காக கடந்த 10 வருடங்களாக முயற்சி செய்து வருகிறோம். பிரபலமான கோயிலுக்குச் சென்று பரிகாரமும் செய்துள்ளோம். கோயில்களில் தொடர்ந்து சங்கடஹர சதுர்த்தி அபிஷேகமும், ஏகாதசி அபிஷேகமும் பெருமாளுக்கு செய்து வருகிறோம். எப்பொழுது திருமணம் ஆகும்?
- கே.ஜெயந்திரன், கும்பகோணம்.

தனுசு லக்னம், மீனம் ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். இதுவரை திருமணம் நடைபெற தாமதம் ஆனதுக்கு களத்திரகாரகன் சுக்கிரன் மீனம் ராசியில் உச்சம் பெற்றாலும், சூரியனோடு அஸ்தங்கமாகி ராகு - கேதுவிற்கு மையப்புள்ளியில் அமர்ந்து தனது பலத்தை இழந்ததே தடைக்கு காரணம். கடந்த ஏழு வருடங்களாக நடைபெற்ற கேது தசையும், களத்திர பாவமான 7ம் இடத்தில் கேது அமர்ந்து குடும்ப ஸ்தானத்தில் நீசம் பெற்ற குருவின் சாரத்தில் அமர்ந்து தசை நடந்தது.

தற்போது நடைபெறும் சுக்கிர தசையும் பாதகாதிபதி புதனின் சாரம் பெற்று, முன்பே சொன்னது போன்று ராகு-கேதுவால் பாதிப்பு அடைந்ததால் செயல்படாத நிலையில் உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஜூன் வரை திருமணம் கைகூடும் காலமாகும். சில குறைகள் இருந்தாலும் நல்ல பெண் கிடைக்கும். ரங்கம் பெருமாளை வெள்ளி தோறும் தரிசனம் செய்யவும். மோதிர விரலில் வைர மோதிரம் வெள்ளியின் மத்தியில் வைத்து அணிவது சிறப்பை உண்டாக்கும்.

* எனது ஒரே மகனின் பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னை சென்றோம். 11.7.2015 அன்று கலந்தாய்வு முடித்து விட்டு நான், எனது கணவர், உறவினர்கள் சேர்ந்து மெரினா பீச் சென்றோம். கரையில் விளையாடிக் கொண்டிருந்த எனது பையனின் முகத்தில் ஒரு அலை அடித்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு நாங்கள் பிடிப்பதற்குள் அலை இழுத்துச் சென்று விட்டது.

நாங்கள் மூன்று நாள் வரை அங்கேயே இருந்து உடல் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். புதுச்சேரி முதல் எண்ணூர் வரை அவனது உடலை தேடியும் கிடைக்கவில்லை. அதன்பிறகு அவனது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு பல ஜோதிடர்களிடம் பார்த்ததில் மகன் உயிரோடு உள்ளார், அதிர்ச்சியில் நினைவு தப்பியிருக்கிறார் என்று கூறுகிறார்கள். அவன் எப்பொழுது எங்களோடு வந்து சேருவான்?
- கே.மகாலட்சுமி, திண்டுக்கல்.

தங்கள் மகன் உயிரோடு உள்ளாரா, இல்லையா என்பதை அறியாமல் 18 மாதமாக நீங்கள் படும் துன்பத்திற்கு நிச்சயம் கடவுள் நல்லதொரு வழிகாட்டுவார். நீங்கள் பார்த்த அனைத்து இடங்களிலும் தங்கள் மகன் உயிரோடு இருப்பதாக சொல்லி உள்ளார்கள். தாங்கள் உள்பட குடும்பத்தார் அனைவரும் அவர் திரும்பி வருவார் என்று நம்பிக்கையோடு உள்ளீர்கள். உண்மை என்னவென்றால் தங்களின் மகனின் ஜாதகம் கடக லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம்.

ராகு தசையில் கேது புத்தியில் குரு அந்தரம் புதன் சூட்சுமத்தில் 12.7.2015 அன்று கடல் அலையில் சிக்கி உள்ளார். அன்றைய நட்சத்திரம் கார்த்திகை. அதன் அதிபதி சூரியன். பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 12ல் மோட்ச ஸ்தானத்தில் உள்ளது. பிறப்பு ஜாதகத்தில் லக்னத்துக்கு 6ல் மாந்தியும் சம்பவம் நடந்த காலமான அன்றைய நேரத்தில் கோட்சார மாந்தியும், லக்னத்துக்கு ஆறாம் இடமான தனுசு ராசியிலே அமர்ந்து கோட்சார சந்திரனுக்கு எட்டில் பிறந்த கால மாந்தியும், ேகாட்சார மாந்தியும் சம்பந்தம் பெறுவது தங்கள் மகன் இறைவனடி சேர்ந்தார் என்பதை உறுதி செய்கிறது. ஜாமக்கோள் பிரசன்னம் அடிப்படையிலும் தங்களின் மகனின் மரணம் உறுதி ஆகிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

* என்ன வேலை செய்யலாம்? எப்பொழுது வீடு கட்ட முடியும்? சிறிது காலங்கள் குறிப்பாக ஒரு வாரம் மனம் நிம்மதியாக இருப்பின் மறு வாரமே மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு மனநிம்மதியை இழந்து விடுகிறேன். இது எதனால்? இதற்கு என்ன செய்ய வேண்டும்? இயந்திர தொழில் செய்யலாமா, லாபமாக அமையுமா?
- ஆர்.முருகானந்தம், திருவாரூர்.

நீங்கள் சிம்ம லக்னம், ரிஷப ராசி, கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ளீர்கள். தற்போது குருதசையில் கேது புக்தி வருகிற ஏப்ரல் மாதம் வரை நடப்பில் உள்ளது. புக்திநாதன் கேது லக்னத்தில் அமர்ந்து சுயசாரத்தில் இருப்பது, எதிலும் மனம் பிடிமானம் இல்லாத போக்கைத் தருகிறது. விருச்சிக ராசிக்கு கோட்சார சனி வந்த காலம் முதலே தங்களின் வாழ்வில் தொழில் முடக்கமும், பிரச்னைகளும் பெரிய அளவில் பண ஏமாற்றமும் உண்டாக்கி விட்டது.

தற்போது சனிபகவான் அதிகாரம் பெற்று தனுசு ராசிக்கு சென்றிருப்பது தங்கள் வாழ்வில் வசந்தத்தை அள்ளித்தர உள்ளது. தொழிலில் ஏற்றமும்வாழ்வில் ஐஸ்வரியங்களை தந்து புதியதொரு பரிமாணத்துக்கு சுக்கிரபுக்தி வரவிருக்கிறது. இயந்திரத் தொடர்பான தொழில் தங்களுக்கு ஏற்றம் தரும்.

தசாநாதன் குருவானவர் நீசம் பெற்ற சனியின் சாரத்தில் அமர்ந்து சனிக்கு ஐந்தாம் இடமான சிம்ம ராசியில் கேது இருப்பதால் மனதில் நிம்மதி இல்லாத நிலையை உண்டாக்கி வருகிறது. பழனி முருகன் கோயிலுக்கு ஒருமுறை சென்று ஏழு சந்நியாசிகளுக்கு காவி வஸ்திரத்தை தானம் செய்து வரவும். வாழ்வில் மாற்றம் உண்டாகும்.

* எனது மகனுக்கு கல்வியில் ஈடுபாடு குறைவாக உள்ளது. எந்த வகைக் கல்வி படித்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும்?
- ஒரு வாசகர்

தங்கள் மகன் துலாம் லக்னம், கும்பம் ராசி, அவிட்டம் நட்சத்திரம். நடப்பு தசையானது ராகு தசையில் சந்திர புக்தி. கல்வி ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் புக்தி நாதன் அமர்ந்து, வருகிற 2018 ஜனவரி மாதம் வரை சந்திர புக்தி உள்ளது. தசைநாதன் ராகு பாக்கியாதிபதி புதனின் நட்சத்திரத்தில் அமர்ந்து புதனோடு சேர்க்க பெறுகிறார். புதன் வக்கிரம் பெறுவது படிப்பை விட விளையாட்டில் ஈடுபாடு அதிகம் உள்ளது.

லாப ஸ்தானமான 11ம் அதிபதி சூரியன் பாதகாதிபதியாகி ராகு புதனோடு சேர்க்கை என்பது கனவு அதிகம் காண வைக்கும். படிப்பை விட தான் தனக்கு பிடித்த துறையின் மேல் அவருக்கு என்ற தனித்திறமை நிச்சயமாக உள்ளது. அதை கண்டுபிடிக்கவும். படிப்பில் சில தடைக்குப் பிறகு தொடர ேவண்டி வரும். அதன்பிறகு வெற்றி பெறுவார். இவருக்கு ஏற்ற சரியான படிப்பு மெக்கானிக் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் துறை சார்ந்த படிப்பேயாகும். எனவே, அதைத் தேர்வு செய்வதே சிறப்பும் ஆகும்.

பிரசன்ன ஜோதிடர் கடலூர் பார்த்தசாரதி

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது,
என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004