ஜூலை மாத ராசி பலன்கள்





தழைக்கும் கல்வியில் லேசான தேக்கங்கள் ஏற்பட்டாலும் ஊக்கத்திற்கு குறைவிருக்காது. கேதுவின் அமைப்பு எழுத்துக் குறைபாடுகளை ஏற்படுத்தும். பிள்ளையாரை கும்பிட்டு ஆரம்பியுங்கள். குடும்ப பெண்களுக்கு கணவரிடம் எதிர்பார்க்கும் காரியம் எதுவும் நடவாததால் ஏமாற்றமே மிகும். எனினும் பாசத்தில் குறையிருக்காது. சுப காரியங்களுக்கான ஆயத்தங்கள் ஏற்படும். அலுவலகப் பெண்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். நோய்கள் நீங்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு அடிமட்ட ஊழியர்களால் தொந்தரவுகள் அதிகரிக்கும். கோபத்தினால் இருக்கும் வேலைக்கு இழப்பையும் அதிகாரிகளின் அதிருப்தியையும் தேடிக் கொள்ளாதீர்கள். ஒருபுறம் தொழிலில் அபிவிருத்தி அடைவதுபோல் தோன்றினாலும் தொழில் முறை கூட்டாளிகளிடம் அபிப்ராய பேதம் தோன்றும். எவருக்காவது கடன் தர நேர்ந்தால் சொத்துக்களை வைத்து கடன் கொடுங்கள். வியாபாரிகளுக்கு பெரிய மனிதர்களின் தொடர்புகளால் லாபம் உண்டு. மர வேலைப்பாடு நிறைந்த தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். வேலைபாட்டிலுள்ள கவனக் குறைவால் மொத்த உழைப்பும் வீணாகும் அபாயம் உண்டு.

அரசியல்வாதிகளுக்கு 16ம் தேதிக்கு பிறகு உஷ்ண அதிகரிப்பால் நோய் காணும். குடும்பத்தில் கொந்தளிப்பும் மனைவி, உற்றார் அனைவருடனும் சண்டையும் ஏற்படும். பெண்களின் கலகத்தால் வம்பு வழக்குகள் ஏற்பட்டு அமைதி இழக்க நேரிடும். இரவினில் அலுவலக வழி பயணங்கள் எதையும் 16ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டாம். பொதுவாக இந்த மாதம் அதீத உற்சாகம் மற்றும் தைரியத்தால் அளவுக்கு மீறிய காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

அச்சாரங்கள் :
8.7.2012 காலை 8:30 மணிக்குள்ளும் 15.7.2012 மணி 12:30க்கு மேல் மாலை 4:00 மணிக்குள்ளும் 24.7.2012 மதியம் 3:00 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று. ரியல் எஸ்டேட் செய்பவர்கள் பழைய வீடுகளை பெற்று மனையாக்க நல்ல காலம்.

எச்சரிக்கை :
27, 28, 29, ஆகிய தேதிகளில் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம். 10.7.2012 மற்றும் 24, 25, 26 தேதிகளில் தனியாகச் செல்லும் பிரயாணங்களில் எச்சரிக்கை தேவை.

பரிகாரம் :
சப்த மாதரில் இந்திராணிக்கு விளக்கு ஏற்றுதல், கோயிலில் யானைக்கு வாழைப்பழம் அளித்தல், பௌர்ணமி உபவாசம் ஆகியவை இந்த மாதத்தில் நன்மை தரும்.



மாணவர்கள் மனதில் ஒருவித பயம் இருக்கும். மாத பிற்பகுதியில் இந்த நிலை தெளிவடையும்.  பாதிப் படிப்பு படிக்கும்போதே சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்; இது நல்லதே. திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கு பெரும் வசதியுள்ள கணவன் கிடைப்பான். அலுவலகப் பெண்கள் மனதில் ஒருவித அச்சம் இருக்கும். பொறுமை அவசியம்.

உத்யோகஸ்தர்களுக்கு  குழப்பமான மனநிலையும் வேதனை தரும் செய்திகளும் அதிர்ச்சியடையச் செய்யும். 16ம் தேதிக்குப் பிறகு தொல்லைகள் குறைந்து பண வரவு உண்டாகும். தொழிலதிபர்கள் தங்கள் குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. கலைஞர்களுக்கு நல்ல நேரம் இது. நிறைய வாய்ப்புகள் கிட்டும். 15ம் தேதி வரை கலை, நுண்கலை, சினிமா துறைகளில் வியாபார ரீதியாக செயல்பட நல்ல பெயர், புகழ் லாபம் கிட்டும். 15ம் தேதிக்குப் பிறகு சில சமயங்களில் கொடுக்கல் வாங்கலில் பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரிகளுக்கு விரோதிகளின் தொல்லை நீங்கும். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் 15ந்தேதி வரை தொழில் நிறுவனங்களுக்காக பெரிய ஒப்பந்தங்களுக்கான பேச்சு வார்த்தை நடத்தலாம். நிர்வாக விஷயங்களை மேம்படுத்தும் ஆளுமை கிடைக்கும். அரசுவழி அதிகாரிகளின் உதவி கிடைக்கும். 15ம் தேதிக்குப் பிறகு வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். பெரிய தலைவர்களின் சந்திப்பும் ஏற்படும். உங்கள் புதல்வர்களால் ஏதேனும் ஒரு வகையில் தொல்லை ஏற்படும்.

அச்சாரங்கள் :
5ம் தேதி காலை 10:30 மணிக்குள்ளும் 7ம் தேதி காலை 8 மணிக்குள்ளும் 28ம் தேதி காலை 8:00 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று. சினிமாத் துறை வியாபாரங்கள் 15ம் தேதிக்குள் முடித்து விடவும்.

எச்சரிக்கை :
14, 15, 16, 24, 25, 26 ஆகிய தேதிகளில் பிரயாணங்களில் எச்சரிக்கை தேவை. வாகன ஓட்டிகள் பெட்ரோல் டாங்க் தரத்தை உறுதி செய்து கொள்வது அவசியம். கர்ப்பிணி பெண்கள் யானை அருகே செல்ல வேண்டாம்.

பரிகாரம் :
முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தல், பார்த்தல், வேல் மாறல் மந்திரம் சொல்லுதல், கேட்டல் ஆகியவை  நன்மையைத் தரும்.



கல்வி முன்னேற்றத்திற்கு மாத ஆரம்பம் சிறப்பான வழிகாட்டும். 10ம் தேதிக்கு பிறகு சற்று அக்கறை இன்மை, வீண் அலைச்சலை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்வார்கள். பெண்களின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்படும். உஷ்ணம், ரத்தப் பெருக்கு போன்ற நோய்கள் நேரும். கணவரின் முழு அரவணைப்பும் ஆறுதலாக இருக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாக வழிகாட்டுதல்களை கவனித்து வரவேண்டும். அதிகாரிகளின் உதவி குறையும். வேலை தேடுபவர்களுக்கு தங்கள் படிப்பிற்கேற்ற வேலை இந்த மாதம் உறுதியாகும். 15ம் தேதிக்கு பிறகு சூரியன் இடமாற்றத்தால் கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். பணப்பட்டுவாடா பொறுப்புகளில் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவும். வழிப்பறி மற்றும் பிறரால் ஏமாற்றப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது.
தொழிலதிபர்களுக்கு செவ்வாய்க்கு 9ம் பாதத்தில் உள்ள குருவின் உதவி பரிபூரணமாக உள்ளது. நீங்கள் இப்போது புதிய திட்டமிடல்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.  இப்போது அதிர்ஷ்டமாக மகன் பிறக்கும் நேரம். எனவே உற்சாகமாகச் செயல்படுங்கள். கூட்டாக சேர்ந்து செயல்படும் திட்டங்கள், பண்ணை முறை, ரியல் எஸ்டேட், சுங்கத் தொழில் இவைகளில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டால் மட்டுமே லாபம் தரும். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

வியாபாரிகள் பல நண்பர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செயல்பட 27.7.2012 வரை நல்ல நேரம். பழைய பெரிய சொத்து ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கும் வாய்ப்பு ஒன்று எதிர்பாராத விதமாக கிட்டும்.  அரசியல்வாதிகளுக்கு 9ம் தேதிக்குள் பதவி உயரும். எதிரிகள் பணிவார்கள். அரசு வழி தொழில் முனைவோர் ஆதரவும் அவர்களுக்கு தங்கள் உதவி செய்யும் வாய்ப்புகளும் கிட்டும்.

அச்சாரங்கள் :
2ம் தேதி 8 மணிக்கு மேல் மாலை 4 மணிக்குள்ளும் 8ம் தேதி காலை 9 மணிக்குள்ளும் 28ம் தேதி காலை 9 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று.

எச்சரிக்கை :
24, 25, 26 ஆகிய தேதிகளில் பிரயாணங்கள் வேண்டாம். சுயமாக வாகனம் ஓட்டுவதை  தவிர்க்கவும்.

பரிகாரம் :
ஐயனார் கோயில் வழிபாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தரிசனம் ஆகியவை நன்மை தரும்.




கல்வியில் ஜெயிப்பதற்கான தைரியமும் உற்சாகமும் கூடியுள்ள நேரத்தில் தந்தையை எதிர்க்கும் எண்ணத்தை கைவிடுங்கள். படிப்புக்காக சகோதரர், சித்தப்பா இவர்களின் உதவி அதிகரிக்கும். 15ம் தேதிக்கு பிறகு உஷ்ண சம்பந்தமான நோய்களால் அவதிப்பட நேரிடும்.  சரியான நேரத்தில் ஸ்காலர்ஷிப் கைகொடுக்கும். குடும்பப் பெண்களுக்கு கணவனால் ஆபரணச் சேர்க்கை உண்டு. அலுவலகப் பெண்களுக்கு வேலை உயர்வும் சம்பள உயர்வும் கிட்டும். அதிகாரிகளிடம் நற்பெயர் கிட்டும். வீடு வாங்க கடன் கிட்டுவதில் இருந்த தடை நீங்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு இது இடமாற்றம் ஏற்படும் நேரம். எதிர்பார்த்தபடியும் திட்டமிட்டபடியும் செயல்படலாம். வீடு, சொத்து இவற்றாலும் வருமானம் பெருக வாய்ப்பு உண்டு. ஆரோக்யம் நன்றாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் கூடும். தொழிலதிபர்களுக்கு இது நல்ல காலம். வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகரித்து அதனால் ஆதாயங்களும் பெறுவீர்கள். பழைய சாதனைகளுக்காக தற்போது கௌரவிக்கப்படுவீர்கள். கூட்டாக தொழில் செய்யும் வாய்ப்பும் தங்களை தேடிவரும். சுற்றுலா நிறுவனங்கள், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் உங்களுக்கு இப்போது கை கொடுக்கும். ரியல் எஸ்டேட், டிரான்ஸ்போர்ட் கம்பெனிகள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் ஆகியவை மிகுந்த சிறப்பைத் தரும். சகோதர சகோதரி வகைகளில் பகை தோன்றும். கவனமாக இருங்கள். தினசரி தொடர்பில் உள்ள நபர்களிடம் உணர்ச்சிவசப்பட நேரும். வீண் விதண்டாவாதம் செய்வதை விட்டு விடுங்கள். அரசியல்வாதிகளுக்கு இது தங்கள் நன்மதிப்பையும் புகழையும் அதிகரிக்கும் நேரமாக இருப்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது.

அச்சாரங்கள் :
1ம் தேதி மதியம் 3 மணிக்குள்ளும் 5ம் தேதி காலை 10:30 மணிக்குள்ளும் 8ம் தேதி காலை 8:30 மணிக்குள்ளும், 15ம் தேதி மதியம் 3 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று.

எச்சரிக்கை :
14, 15, 16, 17, 18, 19 தேதிகளில் பிரயாணங்களில் எச்சரிக்கை தேவை. 24, 25, 26 தேதிகளில் இரவு நேரத்தில் தனியே பயணம் செய்வதையும் சுயமாக வண்டியை ஓட்டிச் செல்வதையும் தவிர்க்கவும்.

பரிகாரம் :
மகாமேரு பூஜை நடைபெறும் போது தரிசித்தல், சிதம்பரம் நடராஜர் தரிசனம் ஆகியவை நன்மை தரும்.



மாணவர்கள் 10ம் தேதிக்குள் தங்களை படிப்பு விஷயத்தில் ஸ்திரப்படுத்திக் கொள்ளவும். தினமும் பிள்ளையாரை கும்பிடுவது நல்லது. குடும்பப் பெண்கள் 28ம் தேதி வரை சுமுகமாக நடந்து கொள்ளுங்கள். நகைகளை அடகு வைக்க நேரும். தங்கள் பெண்களின் காதல் விஷயங்களில் எந்த முடிவுகளையும் 28ம் தேதி வரை எடுக்காதீர்கள். இப்போது எடுக்கும் முடிவுகளின் விளைவுகள் பின்னால் மாறுபாடுகளை ஏற்படுத்தும். அலுவலகப் பெண்கள் அதர்ம வழிகளை கையாளும் போக்குடைய அதிகாரிகளிடம் சிக்க நேரும்; எச்சரிக்கை.  உத்யோகஸ்தர்களுக்கு இப்போது பதவி உயர்வுடன் அதிக வருவாயும் கிட்டும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். சிலர் மறைமுக வருமானங்களால் தகுதியற்றவர்களிடம் சிக்கி அடிமைப்பட நேரும். வங்கிக் கணக்கு பிரிவுகளில் உள்ளவர்கள் தாங்கள் கையாளும் பணத்தின் தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள். இது தங்களுக்கு அவப்பெயர் ஏற்பட காரணமாகலாம். தொழிலதிபர்களுக்கு அந்நிய மனிதர்கள், வேலையாட்கள் இவர்களால் தொல்லை அதிகரிக்கும். எதிரிகள் சேர்க்கையால் தங்கள் வேலையாட்கள் தங்களுக்கு துரோகம் செய்ய நேரிடும். தொழிற்சாலைகளில் தீயணைப்பு முன்னெச்சரிக்கைகளை கண்காணித்து விடுங்கள். அவசர உதவிகள் போன்றவற்றையும் எச்சரிக்கை செய்து வைப்பது நஷ்டங்களை குறைக்கும். வியாபாரிகளுக்கு மற்றவர் ஒத்துழைப்புடன் வியாபார வசதிகளை மேற்கொள்ள 15ம் தேதி வரை நல்ல சந்தர்ப்பங்கள் கிட்டும்.  15ம் தேதிக்குப் பிறகு புதிதாக எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். வரி விஷயங்களை சீர் செய்து அரசு அதிகாரிகளை அலைய விடாமல் இருங்கள். அரசியல்வாதிகள் வாண வேடிக்கைகள் நடக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். பொதுக் கூட்டங்களில் தங்களின் ஒரு வார்த்தை, பல எதிரிகளை ஏற்படுத்தும். எனவே உரைகளில் கவனம் தேவை.

அச்சாரங்கள் :
19ம் தேதி காலை 10:15 மணிக்குள், புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று.

எச்சரிக்கை :
14, 15 தேதிகளில் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. 24, 25, 26 தேதிகளில் தீ பற்றும் இடங்களில் தங்குவதும், பிரயாணம் செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

பரிகாரம் :
திருவேற்காடு, சமயபுரம் மாரியம்மன் தரிசனம், மயிலாடுதுறை பரசலூர் சிவன் தரிசனம் ஆகியவை நன்மையைத் தரும்.



மாணவர்களின் திறமைகள் வெளிப்படும். ஆய்வுக் கூடங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட  வேண்டும்; திடீர் விபத்துக்கள் ஏற்படும். குடும்பப் பெண்கள் தங்களைப்பற்றி பெருமை பேசுவோரிடம் ஜாக்கிரதையாக இருங்கள். 10, 11, 12 தேதிகளில் தங்கள் கணவர் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இந்த மாதம் முழுவதும் அந்நிய மனிதர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். தங்கள் பெயர், கௌரவம் பாதிக்கப்படும். அலுவலகப் பெண்ளுக்கு வாகனம் வாங்கும் முயற்சி 28ம் தேதிக்குள் நிறைவேறும். ஆடை ஆபரணங்கள் சேரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைபெறும். 

உத்யோகஸ்தர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதம். ஆரோக்யம் நன்றாக இருக்கும். அதிகாரிகளின் உதவியும் பெரிய மனிதர்கள் தொடர்பும் கிட்டும். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு 16ம் தேதிக்குப் பிறகு கிட்டும். வருமான உயர்வும் நிச்சயம் உண்டு. தொழிலதிபர்களுக்கு உடல் சோர்வு, மனத் தளர்ச்சி காரணமாக தொழிலில் கவனம் செல்லாது. வேலையில் தவறுகள் நடக்கும். வருமான வரி, அதிகாரிகள் சோதனை என்று அரசு வழியில் தொல்லைகள் ஏற்படும். உயரமான கட்டிடங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் வேலையாட்களை எப்பொழுதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு 15ம் தேதிக்கு பிறகு நல்ல நேரம் வருகிறது. சொந்த வியாபாரங்கள் லாபகரமாக நடக்கும். கூட்டு வியாபாரத்தில் தன்னிச்சையான முடிவுகள் எடுக்க நேரிடும். வீடுகளில் தேங்கியுள்ள வியாபாரப் பொருட்கள் களவு போகும்; எச்சரிக்கை. அரசியல்வாதிகளுக்கு தலைமையின் தொடர்பு நேரடியாக கிட்டும். 15ம் தேதிக்குப் பிறகு எதிர்பாராத திருப்பமும் பதவிகளும் கிட்டும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆதாயமும் வருமானமும் பெருகும்.

அச்சாரங்கள் :
5ம் தேதி காலை 10:30 மணிக்குள்ளும் 15ம் தேதி மதியம் 3 மணிக்குள்ளும் 28ம் தேதி காலை 8:30 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்யலாம்.

எச்சரிக்கை :
கணவன் அல்லது நல்ல துணை இல்லாமல் பெண்கள் பிரயாணம் செய்ய வேண்டாம். 17, 18, 19, 24, 25, 26 தேதிகளில் பிரயாணங்களை முழுவதும் தவிர்க்கவும்.

பரிகாரம் :
சிவன் கோயிலுக்கு வில்வம் எடுத்துத் தருதல், திருவானைக்காவல் அம்பாள் தரிசனம் ஆகியவை  நன்மை தரும்.




தொழில்நுட்பக் கல்வி மாணவர்கள்  யோகா, தியானம் ஆகியவற்றில் சிறிது ஈடுபடுதல் நலம் தரும். தந்தையின் உடல்நிலை சற்று சோர்வையும் தயக்கத்தையும் ஏற்படுத்தும். குடும்பப் பெண்களுக்கு 9ம் தேதி வரை சுற்றத்தார் வருகை, பொன் பொருள் சேர்க்கை என்று கலகலப்பாக இருக்கும். பெண்கள் மூலம் ஆதாயமான பலன்கள் வந்து சேரும். கணவருக்கு தீப்புண் அல்லது கொப்புளங்கள் ஏற்படும். அதிக ரத்தப் போக்கு, காயப்படுதல் ஆகியவை நேரலாம். எனவே பயணங்களில் எச்சரிக்கை தேவை. அலுவலகப் பெண்கள் மதிப்பு, கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாதவாறு செயல்பட மிகுந்த பாடுபட வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு 10, 11, 12 தேதிகளில் அலுவலகத்தில் தேங்கியுள்ள வழக்குகளில் வெற்றி கிட்டும். பதவி உயர்வு உண்டு. 15ம் தேதிக்கு பிறகு அதிகாரிகளின் உதவியும் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு அளவுக்கு மீறிய பணச் செலவும் தன நஷ்டமும் ஏற்படும். எடுத்த காரியங்களில் தோல்வியானது தங்களை சற்று திகைக்க வைக்கும். இப்போது முடிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலைகளை மட்டும் கவனம் செலுத்தி முடிக்கப் பாருங்கள். சோதனையை ஆக்கப்பூர்வமாக மாற்ற இது மட்டுமே நல்ல வழி.

வியாபாரிகளுக்கு பெண்களின் கலகத்தால் குடும்பத்தில் போராட்டம் ஏற்படும். வியாபாரத்தில் கவனம் இழக்கும் சூழல் உருவாகும். சொத்து விரயமாகும்; எச்சரிக்கையாக இருங்கள். அரசியல்வாதிகளுக்கு 15ம் தேதி வரை பொறுமை காக்க வேண்டிய நேரமாகும். 16ம் தேதியிலிருந்து பெண்களால் நன்மை கிட்டும். 19, 20, 21 ஆகிய தேதிகளில் தங்களைபிரதானமாக்கும் நல்ல வாய்ப்பு ஒன்று கிட்டும். இதனைப் பயன்படுத்தி உயரலாம்.

அச்சாரங்கள்:
19ம் தேதி காலை 10:30 மணிக்கு முன்பும், 23ம் தேதி காலை 7:30 மணிக்கும், 30ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்யலாம்.

எச்சரிக்கை:
14, 15, 16, 17, 18, 19 ஆகிய தேதிகளில் பிரயாணங்களில் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்:
நரசிம்மர் தரிசனம், சனிக் கிழமைகளில் நரசிம்மருக்கு கற்கண்டு பானகம் நிவேதனம் செய்தல், சப்தமாதரில் வைஷ்ணவி தரிசனம் ஆகியவை நன்மையைத் தரும்.



கவனம் சிதறாமல் கல்வியில் ஆசையை வளர்த்துக் கொண்டால் போதும். பெருமையும் புகழும் உங்களைச் சுற்றிவரும். உங்களின் அறிவுக் கூர்மை எல்லோராலும் கவனமாக பார்க்கப்படும். குடும்பப் பெண்களுக்கு கணவனுடன் பந்த பாசம் அதிகரிக்கும். தொடர் சளித் தொந்தரவால் வீட்டு வேலைகளில் இடையூறு இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. நல்ல வீட்டிற்கு மாறுவீர்கள். புதிய வீடு வாங்கும் முயற்சியில் இப்போது வெற்றி கிடைக்கும். அலுவலகப் பெண்கள் தங்கள் கணவருடன் வாக்குவாதம் செய்து கருத்து வேற்றுமையை ஏற்படுத்திக் கொள்வர். உற்றார் உறவினர் பகையும் சேரும். எனவே சற்று பொறுமை தேவை.  பெற்ற தந்தையின் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அவசியம் ஏற்படும். 15ம் தேதிக்கு பிறகு நிலைமை சீரடையப் போகிறது. உத்யோகஸ்தர்கள் வெளியே சுற்றும் ஆசையை நிறுத்திவிட்டு அலுவலக வேலையில் கவனம் செலுத்தினால் போதும். இது பதவி உயர்வும் வருமான உயர்வும் கிடைக்கும் நேரம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தில் நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றமும் வருமானப் பெருக்கமும் இருக்கும். எதிர்பாராத பணவரவுகள் தங்கள் தொழில் விரிவாக்கத்திற்கு உதவி புரியும். தொழிலில் மாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் மிக குறைவாகவே காணப்படும். அரசியல்வாதிகள் தங்கள் பெண்களின் வாழ்க்கையின் நலனில் கவனம் செலுத்துங்கள். பதவி வழியாக கிடைக்கும் அதிகார செயலாக்கம் தடைபடும். மற்றவர்கள் வெறுப்புக்கும் பகைக்கும் உங்கள் செயல்கள் காரணமாகும். பதவி மாற்றம் பெறும் சூழ்நிலை ஒன்று வரும். அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அச்சாரங்கள் :
3ம் தேதி மதியம் 2 மணிக்குள்ளும் 8ம் தேதி காலை 8:30 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று.

எச்சரிக்கை :
14, 15, 16 ஆகிய தேதிகளில் பிரயாணங்களை தள்ளிவைக்க முடியுமா என்று பாருங்கள். குடும்பத்துடன் பிரயாணம் எதுவும் செய்ய வேண்டாம். 28ம் தேதிக்குப் பிறகு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.

பரிகாரம் :
வெங்கடேச சுப்ரபாதம் சொல்லுதல், கேட்டல், கும்பகோணம் - திருவிடைமருதூரில் உள்ள ரிஷிபுரீஸ்வரர் கோயில் தரிசனம் ஆகியவை நன்மையைத் தரும்.



தெளிவான மனநிலை இருப்பதால் தீர்க்கமாக உங்களால் படிக்க முடியும். எதைச் செய்ய வேண்டும் என்று நினைத்து வேலையை தொடங்கினீர்களோ அந்த எண்ணத்திலேயே தொடர்ந்து செயல்படுதல் நன்மையைத் தரும். திடீர் சிந்தனைகளாக மாற்று வழி படிப்புகள் பற்றிய யோசனை ஏற்பட்டு மனம் சலனம் பெறும். இது உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறைத் தரும். எனவே அதைத் தவிர்க்க முயலுங்கள். இளம் பெண்களுக்கு கணவரின் உடல்நிலை கவலையை ஏற்படுத்தும். மருத்துவ ஆலோசனையை தவிர்க்க இயலாது. குடும்பங்களில் பெரிய அளவில் கலகம் ஏற்படும். அதனால் நிம்மதி இழப்பீர்கள். அலுவலகப் பெண்களுக்கு நல்லதும் கெட்டதுமான பலன்கள் விளையும். எச்சரிக்கையற்ற நிலையில் வழிப்பறிக்கு ஆளாக நேரும். ஆரோக்கியக் குறைவு உண்டாகும். சாலையில் செல்லும்போது விழிப்புணர்வோடு இருங்கள்; விபத்துகள் நேரும் அபாயம் உள்ளது. தொழிலதிபர்களுக்கு பெரிய பணக்காரர்களை பகைத்துக் கொள்ளும் நிலைமை உருவாகும்.  நேரடியான பாதிப்பினை உணரும் நிலை தோன்றும். தொழில் ரீதியாக நல்ல அபிவிருத்தியும் வருமானப் பெருக்கமும் தங்களை மேலும் உணர்ச்சிபூர்வமாக மாற்றும். நிதானமாக இருங்கள். பூர்வீகச் சொத்தில் உள்ள பிரச்னைகளை சகோதரர்களுடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களுடன் கடும் பிரச்னைகள் தோன்றும். முன்னெச்சரிக்கை தேவை. வியாபார விஷயங்களில் 10ம் தேதிக்குள் தெளிவாக நிதானித்து புதிய வாய்ப்புகளையும் புதிய வியாபாரங்களையும் தொடங்குவீர்கள். இதில் வெற்றி பெறலாம். குழந்தைகளின் ஆதரவு தங்களுக்கு பக்க பலமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு 15ம் தேதி வரை சிறப்பான காலம். தொண்டர்களின் அன்பும் அரவணைப்பும் ஆதரவும் மேலிடம் அறிய வரும். செல்வாக்கு உயரும்.

அச்சாரங்கள் :
6ம் தேதி மாலை 4 மணிக்கு மேலும் 8ம் தேதி காலை 8:30 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று.

எச்சரிக்கை :
14, 15, 16 மற்றும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் தனியாகவோ குடும்பத்துடனோ பிரயாணங்கள் எதையும் செய்ய வேண்டாம். 15ம் தேதி வரை வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம்.

பரிகாரம் :
“வாசுதேவா’’ என்று அடிக்கடி சொல்வது, சோழம்பேட்டை (மயிலாடுதுறை) வானமுட்டிப் பெருமாளை தரிசனம் செய்வது ஆகியவை நன்மையைத் தரும்.



நல்ல கல்வி நிறுவனத்தில் படிக்க கிடைத்தாலும் தந்தையை பிரிய மனமில்லாத நிலை ஏற்படும். மூத்த சகோதரர்களின் வெறுப்பை சம்பாதிக்காதீர்கள். குடும்பம் சீராகச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து பிரிவை ஏற்றுக் கொண்டு படியுங்கள். பெண்களுக்கு இது சிறப்பான நேரம். அனைத்து சண்டை சச்சரவுகளும் நீங்கி புத்துணர்வு பிறக்கும். சிலருக்குத் திருமணம் கைகூடும். காதல் திருமணங்கள் பிரச்னை இல்லாமல் முடியும். தெய்வ பலம் கிட்டும். அலுவலகப் பெண்கள் எந்தக் காரியத்திலும் சக்திக்கு மீறி இறங்காதீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். 16ம் தேதிக்குப் பிறகு வயிறு சம்பந்தமான நோய் தோன்றி மறையும். உத்யோகஸ்தர்களுக்கு 10ம் தேதிக்குப் பிறகு ஏற்றம் பிறக்கும். வேலை தேடுபவர்களுக்கு உடனே நல்ல வேலை கிட்டும். நல்ல உயர் பதவியும் வருமானம் பெருக்கமும் ஏற்படும்.  15, 16 தேதிகளில் பழைய ஆவணங்கள் தேடுமிடங்களில் எச்சரிக்கையாக விழிப்புடன் இருக்கவும். விஷ ஜந்துக்களின் கடி ஏற்பட்டு அதனால் பல தொல்லைகளுக்கு ஆட்பட நேரும். பழைய பேப்பர், பழைய இரும்பு விற்பனை நிலையங்களில் வேலை செய்பவர்களும் எச்சரிக்கையுடன் இருங்கள். அதிகாரிகளுக்கு விரோதிகளின் தொல்லையும் அடிமட்ட ஊழியர்களின் எதிர்ப்பாலும் நிர்வாகத்தில் அமைதியின்மை இருக்கும். தொழிலதிபர்கள் வேலையாட்களை முழுவதும் அனுசரித்துப் போக வேண்டிய காலம் இது. வேலையாட்களின் பலம் அதிகரிக்கும். கோர்ட் வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில் அபிப்ராய பேதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை நிலவும். 28ம் தேதிக்குப் பிறகு இந்த நிலை இன்னும் கடுமையாகும்.  அரசியல்வாதிகளுக்கு 15ம் தேதி வரை வெற்றிகரமான காலம். பண வரவு இருக்கும். 15ம் தேதிக்கு பிறகான பிரயாணத்திலும் வெளியூர் கூட்டங்களிலும் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும்.

அச்சாரங்கள் :
3ம் தேதி மதியம் 2 மணிக்குள்ளும் 8ம் தேதி காலை 9 மணிக்குள்ளும் 15ம் தேதி மாலை 4 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நல்லது.

எச்சரிக்கை :
10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நீண்ட பிரயாணங்கள் எதுவும் செய்ய வேண்டாம். 17, 18, 19 ஆகிய தேதிகளில் வாகனங்களில் வேகமாக செல்லாதீர்கள்.

பரிகாரம் :
வரதராஜப்பெருமாள் கோயில் தாயார் தரிசனம், ரங்கநாதர் ஸ்தோத்திரங்கள் சொல்லுதல், கேட்டல் ஆகியவை  நன்மை தரும்.



படுசுட்டியான மாணவர்களுக்குக் கூட தற்போது சற்று மந்த நிலை காணப்படுகிறது. எனவே நடந்து கொண்டே படித்தல், நல்ல சூழ்நிலையில் அமர வைத்து படிக்கச் செய்தல் ஆகியவை இந்த வருட முன்னேற்றத்திற்கான நல்ல ஆயத்தங்களை செய்து தரும். இந்த ராசி குழந்தைகளின் பெற்றோருக்கு மனை, வீடு, வாகனம் பெறும் வாய்ப்பு இப்போது வாய்க்கும். கணவருக்கு கால் வலி தொந்தரவுகள் தொடரும். குடும்பத்துடன் செல்லும் பிரயாணங்களில் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த நேரத்திலும் மருத்துவச் செலவுகளுக்கு தயாராக இருங்கள். அலுவலகப் பெண்களுக்கு 7, 8 மற்றும் 17, 18 தேதிகளில் எதிர்பாராத புதிய வகை சந்திப்புகளும் விரும்பும் நன்மைகளை பெறும் வாய்ப்பும் கிட்டும். அதிகாரிகளின் ஆட்சேபங்களும் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும். அலுவலகத்தில் ஆவணங்களை கீழே தவற விட்டு அவதிப்படுவீர்கள். ரண சிகிச்சை பெற்றவர்கள் மீண்டும் சீர்செய்ய நேரிடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு 9ம் தேதிக்குள் புதிய வேலை கிடைக்கும். எனினும் இதில் எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளாமல் சேர்வதுதான் நன்மையைத் தரும்.

தொழிலதிபர்களுக்கு திடீர் பிரச்னைகள் தோன்றும். கடன் வாங்குவதையும் தொழிற்சாலை ஆவணங்களை அடமானம் வைப்பதையோ முற்றிலும் தவிர்க்கவும். இந்த நேரத்தில் முருகனுக்கு விபூதி அபிஷேகம் செய்வித்து வேண்டுதல் மேற்கொள்வது பலன் தரும். சிலருக்கு நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். விஞ்ஞானப் பொருட்கள் மற்றும் ரசாயனப் பொருட்களின் வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கு 15ம் தேதி வரையில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். மாற்று இனத்தவர் ஆதரவு அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புகளில் பலன் பெற முயற்சித்தால் நன்மை கூடும்.

அச்சாரங்கள் :
2ம் தேதி காலை 9 மணிக்கு மேல் மதியம் 3 மணிக்குள்ளும் 9ம் தேதி 9 மணிக்கு மேல் 10 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று.

எச்சரிக்கை :
    17, 18, 19 தேதிகளில் பிரயாணத்தில் கவனமாக இருக்கவும். 24, 25, 26 தேதிகளில் முழுவதும் பிரயாணம் செய்ய வேண்டாம். மிகுந்த பாதுகாப்புடன் இருக்கவும்.

பரிகாரம் :
திருவண்ணாமலை பாதாள லிங்க தரிசனம், ரமண துதிகள் சொல்லுதல், கேட்டல், துர்க்கை வழிபாடு ஆகியவை இந்த மாதம் நன்மை தரும்.



மாணவர்களால் பெற்றோருக்கு தாங்கமுடியாத தொல்லைகள் ஏற்படும். காரிய சாதனைக்காக வீம்பு செய்து அதிக செலவில் படிக்க நேரிடும். புதிய இடங்களில் வயிற்று வலி மற்றும் கண் உபாதைகள் ஏற்படும். குடும்பப் பெண்கள் மூத்த சகோதரர்களுடன் ஒத்துப்போவது நல்லது. இப்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்னையில் விட்டுக் கொடுப்பது மட்டுமே பலன் தரும். கணவரிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதையும் பழைய விஷயங்களை கிளறிப் பேசுவதையும் முழுவதும் தவிர்க்கவும். அலுவலகப் பெண்களுக்கு தற்போதைய நிலையில் அதிகாரிகளின் ஆதரவு கிட்டாது. 28ம் தேதிவரை நட்பு வட்டங்கள் மட்டுமே உதவி புரியும். வீடு, மனை வாங்கும் திட்டங்களை கொஞ்சம் ஒத்திப்போடுங்கள். குழந்தைகளின் ஆரோக்யத்திற்கான செலவுகள் அதிகரிக்கும். இதே காலத்தில் குடும்பத்திலும் சச்சரவுகள் தென்படுகின்றன. எனவே பொறுமையாக இருக்கவும். வருமானக் குறைவும், கடன் தொல்லையும் வாட்டும். தீய நண்பர்கள் சேர்க்கையும் தீய பழக்கங்களுக்கு ஆட்படும் தன்மையும் ஒருசேர தெரிகிறது. எச்சரிக்கை. தனியாக இருக்கும் நேரங்களை வயதானவர்களுடன் சேர்ந்து கழிப்பது நல்லது. தொழிலதிபர்களின் தொடர்புகள் மூலம் நல்ல வாய்ப்புகள் ஆரம்பிக்கின்றன. பிரயாணங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். எதிர்கால திட்டங்களை இறுதி செய்வதற்கு ஏற்ற நேரமாக 16 முதல் 27 வரையிலான காலகட்டம்தான் சிறந்தது. தொழிலில் மூலதனம் செய்ய பணம் வரும் வாய்ப்பும் உண்டு. அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு ஓரளவு நல்ல லாபம் வரும் நேரம் இது. வெளிவட்டாரத் தொடர்புகளும் அரசியல்வாதிகளின் உதவியும் தங்கள் நிலை உயர பயன்படும். விளையாட்டுப் பொருட்களின் விற்பனை இப்பொழுது நன்கு கைகொடுக்கும். அரசியல் வாதிகள் மன உறுதியுடனும் தைரியமாகவும் செயல்படலாம். தங்கள் வசம் ஒப்படைக்கப்படும் பணிகளை நல்லபடியாக முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். 10ம் தேதிவரை கோர்ட் விவகாரங்களில் ஈடுபடுவதை தள்ளிப் போடுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் தீய பழக்கங்களில் ஈடுபட்டு பொது இடங்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

அச்சாரங்கள்:
10ம் தேதி காலை 9:30 மணிக்குள்ளும் 15ம் தேதி மாலை 4 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்று,

எச்சரிக்கை:
17, 18, 19, 24, 25, 26 ஆகிய தேதிகளில் பயணங்களில் அதீத கவனமும் எச்சரிக்கையும் தேவை.

பரிகாரம்:
திருத்தணி முருகனின் தரிசனம், துர்க்கை ஸ்லோகங்கள் சொல்லுதல், கேட்டல் ஆகியவை நலம் தரும்.